தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - தேவநேயப் பாவாணர்-PART-2
தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - தேவநேயப் பாவாணர் (PART 2)
8-ம் வகுப்பு (பழைய புத்தகம்): தேவநேயப் பாவாணர் (1-27)
1) தமிழின் தொன்மையை உலகறியச் செய்தவர் யார்?
விடை: கால்டுவெல்
2) தனித் தமிழுக்கு வித்திட்ட கவிஞர் யார்?
விடை: பரிதிமாற்கலைஞர்
3) தமிழைத் தழைக்கச் செய்த செம்மல் யார்?
விடை: மறைமலையடிகள்
4) தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் யார்?
விடை: தேவநேயப் பாவாணர்
5) தேவநேயப் பாவாணர் பிறந்த ஊர் எது?
விடை: சங்கரன் கோவில், திருநெல்வேலி
6) தேவநேயப் பாவாணரின் பெற்றோர் யாவர்?
விடை: ஞானமுத்து - பரிபூரணம்
7) தேவநேயப் பாவாணரின் காலம் என்ன?
விடை: 07.02.1902 முதல் 15.01.1981 வரை
8) தேவநேயப் பாவாணரின் சிறப்புப் பெயர்கள் யாவை?
| வகை | சிறப்புப் பெயர்கள் |
|---|---|
| முக்கியப் பெயர்கள் | செந்தமிழ்ச் செல்வர், தமிழ்பெருங் காவலர், செந்தமிழ் ஞாயிறு |
| பிற பெயர்கள் | தனித்தமிழ் ஊற்று, இலக்கியப் பெட்டகம், இலக்கணச் செம்மல் |
| எண்ணிக்கை | மொத்தம் 174 சிறப்புப் பெயர்கள் உள்ளன. |
9) கோவில்களில் தமிழில் வழிபாடு நடைபெற வேண்டும் எனக் கூறியவர்?
விடை: தேவநேயப் பாவாணர்
10) பிறப்பு, இறப்பு சடங்குகள் யாவும் தமிழில் நடைபெற வேண்டும் எனக் கூறியவர்?
விடை: தேவநேயப் பாவாணர்
11) ஒவ்வொரு சொல்லின் ஆணிவேருக்கும் மூலம் தமிழே எனக் கூறியவர்?
விடை: தேவநேயப் பாவாணர்
12) பாவாணர் நீலகிரி சென்றபோது யாருடைய வீட்டில் தங்கினார்?
விடை: கிருட்டினய்யா
13) "உண்ட வீட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும்" - என்று கூறியவர்?
விடை: தேவநேயப் பாவாணர்
14) வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னை படைத்தான் - கூறியவர்?
விடை: தேவநேயப் பாவாணர்
15) "தமிழ் வளர்த்தால் பசியும் பட்டினியும் பறந்து போகும்" - கூறியவர்?
விடை: தேவநேயப் பாவாணர்
16) "எனக்கு வறுமையும் உண்டு... அவற்றோடு மானமும் உண்டு" - கூறியவர்?
விடை: தேவநேயப் பாவாணர்
17) மதுரையில் எத்தனையாவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது?
விடை: 5-வது உலகத்தமிழ் மாநாடு
18) மதுரையில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு?
விடை: 1981 ஆம் ஆண்டு
19) மதுரை மாநாட்டில் பாவாணர் சொற்பொழிவாற்றிய தலைப்பு என்ன?
விடை: மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்
20) எந்த நாளில் பாவாணர் மதுரை மாநாட்டில் சொற்பொழிவாற்றினார்?
விடை: 05.01.1981
21) பாவாணர் நூலகம் அமைக்கப்பட்டுள்ள இடம் எது?
விடை: சென்னை
22) பாவாணர் கோட்டம் அமைந்துள்ள இடம் எது?
விடை: முறம்பு (ராஜபாளையத்திற்கு அருகில்)
23) செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி இயக்க இயக்குனராகப் பொறுப்பேற்ற ஆண்டு?
விடை: 1974
24) தேவநேயப் பாவாணரின் கொள்கைகள் யாவை?
| கருத்து | பாவாணரின் கொள்கை |
|---|---|
| முதல் மாந்தன் | உலகின் முதல் மாந்தன் தமிழன் |
| தோன்றிய இடம் | தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் |
| நாகரீகம் | மொகஞ்சதாரோ ஹரப்பா நாகரீகம் பழந்தமிழர் நாகரீகம் |
25) "செந்தமிழ் ஞாயிறு" விருது யாரால் வழங்கப்பட்டது?
விடை: குன்றக்குடி அடிகளார்
26) "செந்தமிழ் செல்வர்" விருது யாரால் வழங்கப்பட்டது?
விடை: தமிழக அரசால்
27) "தமிழ் பெருங்காவலர்" விருது யாரால் வழங்கப்பட்டது?
விடை: மதுரை தமிழ்ச் சங்கம்
Comments
Post a Comment