தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - டி.கே.சி
தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - டி.கே.சி (46 வினாக்கள்)
பகுதி 1: ஊர்களும் புலவர்களும்
1) பாரதியார் பிறந்த இடம்
எது?
விடை:
எட்டையபுரம்
2) தேசிகவிநாயகர் பிறந்த இடம்
எது?
விடை: கன்னியாகுமரி
(நாஞ்சில் நாடு)
3) தேசிகவிநாயகர் கல்வி கற்ற
இடம் எது?
விடை:
திருநெல்வேலி
4) கோயில்பட்டியில் இருந்து
சுமார் எட்டு கிலோமீட்டர் கிழக்கே அமைந்த ஊர் எது?
விடை: எட்டையபுரம்
5) வெங்கடேச எட்டப்ப
ராசாவைப் பற்றிப் பாடல் இயற்றியவர் யார்?
விடை:
கடிகைமுத்துப் புலவர்
6) தாமிரபரணியும் சிற்றாறும்
கலக்கிற இடம் எது?
விடை: சீவலப்பேரி என்கிற
முக்கூடல்
7) முக்கூடல் பற்றிய பிரபந்தம்
எது?
விடை: முக்கூடல்
பள்ளு
8) குடியானவர்களுக்கு சங்கீதம்
எது?
விடை:
இடிமுழக்கம்
9) குடியானவர்களுக்கு நடனம்
எது?
விடை: மின்னல்
வீச்சு
10) மதுரையில் இருந்து
திருநெல்வேலிக்கு வந்த புலவர் யார்?
விடை: பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
11) நெல்லையப்பர் கோவிலில்
காந்திமதித் தாயைத் தரிசித்தவர் யார்?
விடை: பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
12) நம்மாழ்வார் அவதரித்த
தளம் எது?
விடை: ஆழ்வார் திருநகரி
(பழைய பெயர்: திருக்குருகூர்)
13) ஆயிரம் தமிழ்ப்பாட்டு என்று
அழைக்கப்படும் நூல் எது?
விடை:
திருவாய்மொழி
14) சிவைகுண்டப் பெருமாளைப்
பற்றிப் பாடியவர் யார்?
விடை:
பிள்ளைப் பெருமாள்
15) திருவாய்மொழியை
இயற்றியவர் யார்?
விடை:
நம்மாழ்வார்
16) கொற்கை முத்தைப் பற்றிப்
பாடிய புலவர் யார்?
விடை: முத்தொள்ளாயிர
ஆசிரியர்
17) காயல்பட்டினத்தில் இருந்த
பெருவணிகர் யார்?
விடை:
சீதக்காதி
18) தமிழ் புலவர்களுக்குப்
பெருங்கொடை கொடுத்து வந்தவர் யார்?
விடை: சீதக்காதி
19) சீதக்காதியின் மறைவை
ஆற்றாமையோடு பாடியவர் யார்?
விடை: நமசிவாயப் புலவர்
20) திருப்புகழ் பாடியவர்
யார்?
விடை:
அருணகிரிநாதர்
21) கழுகுமலையில்
வீற்றிருக்கும் இறைவன் யார்?
விடை:
முருகன்
22) காவடிச்சிந்து பாடியவர்
யார்?
விடை:
அண்ணாமலையார்
23) காவடிப்பாட்டை எவ்வாறு
கேட்க வேண்டும்?
விடை: பம்பை, மேளம்,
ஆட்டத்துடன்
24) சங்கரன் கோவில் கோமதித்
தாயைப் பாடியவர் யார்?
விடை: அழகிய
சொக்கநாதர்
25) சங்கரன் கோவிலுக்கு
வடக்கே எட்டு மைலில் அமைந்துள்ள தளம் எது?
விடை: கருவை நல்லூர் (கரிவலம் வந்த
நல்லூர்)
26) கருவை நல்லூரில் சிறந்த
புலவரால் பாடப்பட்ட நூல்கள் யாவை?
விடை: திருக்கருவை வெண்பா அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி,
கலித்துறை அந்தாதி
27) கவி இல்லாமலே மனசைக்
கவரக் கூடிய இடம் எது?
விடை:
குற்றாலம்
28) "நுண்துளி தூங்கும்
குற்றாலம்" எனப் பாடியவர் யார்?
விடை: திருஞானசம்பந்தர்
29) "குற்றாலத் துறைகின்ற
கூத்தா உன் குரைகழற்கே" எனப் பாடியவர் யார்?
விடை: மாணிக்கவாசகர்
30) குற்றாலக் குறவஞ்சியை
இயற்றியவர் யார்?
விடை: திரிகூடராசப்பக்
கவிராயர்
31) திரிகூடராசப்பக் கவிராயர்
வாழ்ந்த ஊர் எது?
விடை:
மேலகரம்
பகுதி 2: இரசிகமணி டி.கே.சி - சிறப்புகள்
32) டி.கே.சி என
அழைக்கப்படுபவர் யார்?
விடை:
டி.கே.சிதம்பரநாதர்
33) டி.கே.சி என்ன தொழில்
செய்து வந்தார்?
விடை:
வழக்கறிஞர்
34) 'இரசிகமணி' என்று
சிறப்பிக்கப்பட்டவர் யார்?
விடை:
டி.கே.சி
35) 'வட்டத்தொட்டி' என்னும்
பெயரில் இலக்கியக் கூட்டம் நடத்தியவர் யார்?
விடை: டி.கே.சி
36) 'இதய ஒலி' என்ற நூலின்
ஆசிரியர் யார்?
விடை: டி.கே.சி
37) டி.கே.சி எவ்வாறெல்லாம்
சிறப்பிக்கப்படுகிறார்?
விடை: கடித
இலக்கியத்தின் முன்னோடி, தமிழிசைக் காவலர், வளர்தமிழ் ஆர்வலர்,
குற்றால முனிவர்
38) இரசிகமணி
டி.கே.சிதம்பரனாரின் காலம் என்ன?
விடை: 1882 முதல் 1954 வரை
39) "தமிழில் எல்லாம் உண்டு;
தமிழின் கவிச்சுவைக்கு ஈடுமில்லை இணையுமில்லை" என்றவர்
யார்?
விடை: இரசிகமணி
டி.கே.சி
40) டி.கே.சியின் வீட்டில் ஞாயிறு
தோறும் கூடிய கூட்டத்திற்கு என்ன பெயர்?
விடை: வட்டத் தொட்டி
41) தமிழால் அறிவியல்
மட்டுமன்று அனைத்து இயல்களையும் கற்க முடியும் என்றவர்
யார்?
விடை: டி.கே.சி
42) யார் கடிதங்கள் புதிய
இலக்கிய வகையாகவே கருதப்பட்டன?
விடை: டி.கே.சி
43) டி.கே.சியின் தொழில்
என்ன?
விடை: வழக்கறிஞர்
தொழில்
44) டி.கே.சியின் நூல்கள்
யாவை?
விடை: இதய ஒலி, கம்பர்
யார்?
45) டி.கே.சி எந்த நூல்களுக்கு
உரை எழுதியுள்ளார்?
விடை:
முத்தொள்ளாயிரம், கம்பராமாயணம்
46) சென்னை மாநில
மேலவையின் உறுப்பினராகவும், அறநிலையத்துறை ஆணையராகவும்
திகழ்ந்தவர் யார்?
விடை: டி.கே.சி
Comments
Post a Comment