தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - தேவநேயப் பாவாணர்-PART-1
தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - தேவநேயப் பாவாணர்
10-ம் வகுப்பு: தமிழ்ச் சொல்வளம் (1-33)
1) "நாடும் மொழியும் நமதிரு கண்கள்" என்றவர் யார்?
விடை: மகாகவி பாரதியார்
2) "திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்" என்ற நூலின் ஆசிரியர் யார்?
விடை: கால்டுவெல்
3) ஒரு தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள் யாவை?
| சொல் | விளக்கம் |
|---|---|
| தாள் | நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி |
| தண்டு | கீரை, வாழை முதலியவற்றின் அடி |
| கோல் | நெட்டி, மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி |
| தூறு | குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி |
| தட்டு/தட்டை | கம்பு, சோளம் முதலியவற்றின் அடி |
| கழி | கரும்பின் அடி |
| கழை | மூங்கிலின் அடி |
| அடி | புளி, வேம்பு முதலியவற்றின் அடி |
4) கிளைப்பிரிவுகளுக்கு வழங்கும் சொற்கள் யாவை?
| பெயர் | விளக்கம் |
|---|---|
| கவை | அடிமரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை |
| கொம்பு/கொப்பு | கவையின் பிரிவு |
| கிளை | கொம்பின் பிரிவு |
| சினை | கிளையின் பிரிவு |
| போத்து | சினையின் பிரிவு |
| குச்சு | போத்தின் பிரிவு |
| இணுக்கு | குச்சியின் பிரிவு |
5) காய்ந்த தாவரத்தின் பகுதிகளுக்கு வழங்கும் சொற்கள் யாவை?
| சுள்ளி | காய்ந்த குச்சு (குச்சி) |
| விறகு | காய்ந்த சிறுகிளை |
| வெங்கழி | காய்ந்த கழி |
| கட்டை | காய்ந்த கொம்பும் கவையும் அடியும் |
6) தாவரங்களின் இலை வகைகளைக் குறிக்கும் சொற்கள் யாவை?
| இலை | புளி, வேம்பு முதலியவற்றின் இலை |
| தாள் | நெல், புல் முதலியவற்றின் இலை |
| தோகை | சோளம், கரும்பு முதலியவற்றின் இலை |
| ஓலை | தென்னை, பனை முதலியவற்றின் இலை |
| சண்டு | காய்ந்த தாளும் தோகையும் |
| சருகு | காய்ந்த இலை |
7) தாவரங்களின் நுனிப்பகுதியைக் குறிக்கும் சொற்கள் யாவை?
| துளிர் / தளிர் | நெல், புல் முதலியவற்றின் கொழுந்து |
| முறி / கொழுந்து | புளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்து |
| குருத்து | சோளம், கரும்பு, தென்னை, பனை ஆகியவற்றின் கொழுந்து |
| கொழுந்தாடை | கரும்பின் நுனிப்பகுதி |
8) பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள் யாவை?
| அரும்பு | பூவின் தோற்ற நிலை |
| போது | பூ விரியத் தொடங்கும் நிலை |
| மலர் (அலர்) | பூவின் மலர்ந்த நிலை |
| வீ | மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலை |
| செம்மல் | பூ வாடின நிலை |
9) சொல்லாராய்ச்சியில் பாவாணாரும் வியந்த பெருமகனார் யார்?
விடை: தமிழ்த்திரு இரா. இளங்குமரனார்
10) திருவள்ளுவர் தவச்சாலையை நிறுவியவர் யார்?
விடை: இரா. இளங்குமரனார்
11) பாவாணார் நூலகம் அமைத்திருப்பவர் யார்?
விடை: இரா. இளங்குமரனார்
12) தமிழ் வழித் திருமணங்களை நடத்தி வருபவர் யார்?
விடை: இரா. இளங்குமரனார்
13) இமைகளை மூடி எழுதும் ஆற்றலை பெற்றவர் யார்?
விடை: திரு.வி.க
14) விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்து விடக்கூடாது என்று எண்ணியவர் யார்?
விடை: இரா. இளங்குமரனார்
15) திரு.வி.கா போல் கண்களை மூடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர் யார்?
விடை: இரா. இளங்குமரனார்
16) தமிழ்த்திரு இரா. இளங்குமரனார் எழுதிய நூல்கள் யாவை?
விடை: இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி உரை, யாப்பருங்கலம் உரை, புறத்திரட்டு உரை, திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கைப்பாடினிய உரை, தேவநேயம்.
17) தாவரத்தின் பிஞ்சு வகைகளுக்கு வழங்கும் சொற்கள் யாவை?
| பூம்பிஞ்சு | பூவோடு கூடிய இளம்பிஞ்சு |
| பிஞ்சு | இளம் காய் |
| வடு | மாம்பிஞ்சு |
| மூசு | பலாப்பிஞ்சு |
| கவ்வை | எள்பிஞ்சு |
| குரும்பை | தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு |
| முட்டுக் குரும்பை | சிறு குரும்பை |
| இளநீர் | முற்றாத தேங்காய் |
| நுழாய் | இளம் பாக்கு |
| கருக்கல் | இளம் நெல் |
| கச்சல் | வாழைப்பிஞ்சு |
18) தாவரங்களின் குலை வகைகளைக் குறிக்கும் சொற்கள் யாவை?
| கொத்து | அவரை, துவரை முதலியவற்றின் குலை |
| குலை | கொடி முந்திரி போன்றவற்றின் குலை |
| தாறு | வாழைக் குலை |
| கதிர் | கேழ்வரகு, சோளம் முதலியவற்றின் கதிர் |
| அலகு / குரல் | நெல், திணை முதலியவற்றின் கதிர் |
| சீப்பு | வாழைத் தாற்றின் பகுதி |
19) கெட்டுப்போன காய் கனி வகைகளின் சொற்கள் யாவை?
| சூம்பல் | நுனியில் சுருங்கிய காய் |
| சிவியல் | சுருங்கிய பழம் |
| சொத்தை | புழு பூச்சி அரித்த காய் அல்லது கனி |
| வெம்பல் | சூட்டினால் பழுத்த பிஞ்சு |
| அழுகல் | குளுகுளுத்து நாறிய பழம் அல்லது காய் |
| சொண்டு | பதராய் போன மிளகாய் |
| கோட்டான் காய் | கோட்டான் உட்கார்ந்ததால் கெட்ட காய் |
| தேரைக் காய் | தேரை உட்கார்ந்ததால் கெட்ட காய் |
| ஒல்லிக்காய் | தென்னையில் கெட்ட காய் |
20) பழங்களின் மேற்பகுதியைக் குறிக்கும் சொற்கள் யாவை?
| தொலி | மிக மெல்லியது |
| தோல் | திண்ணமானது |
| தோடு | வன்மையானது |
| ஓடு | மிக வன்மையானது |
| குடுக்கை | சுரையின் ஓடு |
| மட்டை | தேங்காய் நெற்றின் மேற்பகுதி |
| உமி | நெல், கம்பு முதலியவற்றின் மூடி |
| கொம்மை | வரகு, கேழ்வரகு முதலியவற்றின் மூடி |
21) தாவரங்களின் இளம் பருவத்திற்கான சொற்கள் யாவை?
| நாற்று | நெல், கத்தரி முதலியவற்றின் இளநிலை |
| கன்று | மா, புளி, வாழை முதலியவற்றின் இளநிலை |
| குருத்து | வாழையின் இளநிலை |
| பிள்ளை | தென்னையின் இளநிலை |
| குட்டி | விளாவின் இளநிலை |
| மடலி / வடலி | பனையின் இளநிலை |
| பைங்கூழ் | நெல், சோளம் முதலியவற்றின் பசும் பயிர் |
22) இலையைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் எது?
விடை: Leaf
23) இலையைக் குறிக்கும் தமிழ் சொற்கள் யாவை?
விடை: தாள், இலை, தோகை, ஓலை
24) சம்பா நெல் வகைகள் மொத்தம் எத்தனை உள்ளன?
விடை: 60 வகை
25) ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது?
விடை: மலேசியா
26) உலக மொழி மாநாட்டில் எந்த மொழிக்காக நடத்தப்பட்டது?
விடை: தமிழ் மொழி
27) மேற்கூறிய கூற்றைக் கூறியவர் யார்?
விடை: பன்மொழிப் புலவர் க.அப்பாதுரையார்
28) மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுவபர் யார்?
விடை: தேவநேயப்பாவாணர்
29) "தமிழ் சொல்வளம்" என்னும் கட்டுரை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?
விடை: தேவநேயப்பாவாணரின் சொல்லாய்வு கட்டுரைகள்
30) உலகத் தமிழ் கழகத்தை நிறுவி தலைவராக இருந்தவர் யார்?
விடை: தேவநேயப்பாவாணர்
31) செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குனராக இருந்தவர் யார்?
விடை: தேவநேயப்பாவாணர்
32) இந்திய மொழிகளிலேயே மேலை நாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறிய மொழி எது?
விடை: தமிழ் மொழி
33) முதன் முதலில் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் எது?
விடை: கார்டிலா (Cartilha), 1554 ஆம் ஆண்டு
Comments
Post a Comment