தமிழ் பழமொழிகள்-விளக்கம்-தொகுப்பு-9
| எண் | பழமொழி | விளக்கம் |
| 1 | ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா? | அனுபவமில்லாத கல்வி வாழ்க்கைக்கு உதவாது |
| 2 | ஏழைப்பேச்சு அம்பலம் ஏறாது | வறுமை |
| 3 | ஏழையைக் கண்டால் மோழையும் பாயும் | வறுமை |
| 4 | ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும் | ஏழை கண்ணீரின் வலிமை |
| 5 | ஐங்காதம் போனாலும் தன்வினை தன்னோடு | ஊழ்வினையின் வலிமை |
| 6 | ஐம்பொறி வென்றவன் தவசி | தன்னை உணர்தல் |
| 7 | ஐந்து பணத்திற்கு குதிரையும் வேண்டும் ஆறு கடக்க பாயவும் வேண்டும் | பேராசை |
| 8 | ஐயர் வருமட்டும் அமாவாசை காத்திருக்குமா? | காலம் நில்லாது |
| 9 | ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் | ஒரு முழு விஷயத்தையும் சோதிக்க, அதன் ஒரு சிறிய பகுதியை மட்டும் ஆராய்ந்தாலே போதும் |
| 10 | ஒரு கை தட்டினால் ஓசை உண்டாகுமா? | கூட்டு முயற்சியின் முக்கியத்துவம் |
| 11 | ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு | ஒற்றுமையாக இருந்தால் எதனையும் சாதிக்கலாம் |
Comments
Post a Comment