| 1 | அகத்தின் அழகு முகத்தில் தெரியும் | மனத்தில் இருப்பதை முகம் காட்டும்; மனதின் பிரதிபலிப்பு. |
| 2 | அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது | முக்கியமானவர் இன்றி எக்கருமமும் நடைபெறாது. |
| 3 | அஞ்சுக்கு இரண்டு பழுதில்லை | ஆற்றாமை. |
| 4 | அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு | ஒற்றுமையே பலம். |
| 5 | அடி உதவுவதுபோல அண்ணன்தம்பி உதவமாட்டார்கள் | பலவந்தம். |
| 6 | அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கிலே அமிர்தமும் | வஞ்சகம்; பாசாங்கு (பொய்யான நடிப்பு), உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல். |
| 7 | அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் | விடாமுயற்சி வெற்றி அளிக்கும். |
| 8 | அடுத்து முயன்றாலும் ஆகும் நாள்தான் ஆகும் | விதி. |
| 9 | அத்திப் பூ போல | அருமை. |
| 10 | அம்பட்டன் குப்பையைக் கிளறினால் மயிராக வரும் | தேடல். |
| 11 | அயலார் வாழ்ந்தால் அஞ்சு நாள் பட்டினி | பொறாமை. |
| 12 | அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் | அச்சம். |
| 13 | அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயில் மண்ணு | சைவ வைணவ வேறுபாடின்மை. |
| 14 | அருமையற்ற வீட்டில் எருமையுங் குடியிராது | அன்பு, சுத்தம், மரியாதை. |
| 15 | அரைக்காசுக்கு அழிந்த கற்பு 1000 பொன் கொடுத்தாலும் வராது | கற்பின் பெருமை. |
| 16 | அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு | ஆத்திரம்; பொறுமையின்மை. |
| 17 | அவனுக்குச் சுக்கிரதிசை அடிக்கிறது | அதிர்ஷ்டம். |
| 18 | அவன் சிறகொடிந்த பறவை | நொந்துபோதல். |
| 19 | அழுதுபிள்ளை பால் குடிக்கும் / அழுகிற பிள்ளை பால் குடிக்கும் | முயற்சி. |
| 20 | அழையாத வீட்டில் நுழையாதே | மரியாதை. |
| 21 | அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு | எதையும் அளவோடு அனுபவித்தல் வேண்டும். |
| 22 | அறுக்கமாட்டாதவன் இடுப்பிலே ஐம்பத்தெட்டு அரிவாள் | சோம்பல். |
| 23 | அறுத்த விரலுக்குச் சுண்ணாம்பு தரமாட்டான் | கஞ்சத்தனம். |
| 24 | அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும் | சிறியது பெரியவற்றைக் கெடுக்கும். |
| 25 | அன்பான சினேகிதனை ஆபத்தில் அறியலாம் | உண்மை நட்பு. |
| 26 | அன்று எழுதியவன் அழித்தெழுத போவதில்லை | விதி. |
| 27 | அஞ்சு பைசா குதிரையும் வேண்டும் ஆறு கடக்கவும் வேண்டும் | பேராசை. |
Comments
Post a Comment