தமிழ் பழமொழிகள்-விளக்கம்-தொகுப்பு-7
| எண் | பழமொழி | விளக்கம் |
| 1 | உடையவன் பாராப்பயிர் உருப்படுமா? | பயனற்றது / சரியான கவனிப்பு இல்லாமை |
| 2 | உண்கிற சோற்றில் நஞ்சைக் கலக்கலாமா? | வஞ்சகம் |
| 3 | உண்ட வீட்டிற்கு ரெண்டகம் நினையாதே | நன்றி மறவாமை |
| 4 | உண்ணார்ச் சொத்து மண்ணாய்ப் போகும் | கஞ்சத்தனம் கூடாது |
| 5 | உதட்டிலே உறவும் நெஞ்சிலே பகையும் | பாசாங்கு (பொய்யான நடிப்பு) |
| 6 | உப்பிட்டவரை உள்ளளவும் நினை | நன்றி |
| 7 | உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி | திண்டாட்டம் |
| 8 | உழுகிற நாளில் ஊருக்குப் போய் அறுக்கிற நாளில் அரிவாள் கொண்டு வந்தது போல | சோம்பல் |
| 9 | உள்ளங்கையில் வைகுந்தம் காட்டுகிறேன் | தற்புகழ்ச்சி |
| 10 | உள்ளத்தைச் சொன்னால் உடம்பு எரிச்சல் எடுக்கும் | உண்மை வலிக்கும் |
| 11 | உள்ளத்தைச் சொன்னால் ஊருக்குப் பகை | உண்மை வலிக்கும் |
| 12 | உறங்கின நரிக்கு உணவு கிடைக்காது | உழைப்பு |
| 13 | உறவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது | உபயோகமின்மை |
| 14 | உறியிலே வெண்ணெயிருக்க நெய்க்கு அலைவானேன்? | வைத்துக்கொண்டு தேடல் |
| 15 | உன் வாயிலே மண் விழ | சாபம் |
| 16 | உடையவன் பாரா வேலை ஒரு முழம் கட்டை | உரியவன் இல்லாக் கருமம் குறைப்படல் |
| 17 | உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? | தகுதிக்கு மேலே எண்ணாதே |
| 18 | உறியில் நெய் இருக்க ஊரெல்லாம் நெய்க்கு அலைவானேன்? | வேண்டியதைத் தன்னிடமே வைத்துக்கொண்டு பிறரிடம் வேண்டல் |
Comments
Post a Comment