தமிழ் பழமொழிகள்-விளக்கம்-தொகுப்பு-8

 

எண்பழமொழிவிளக்கம்
1ஊசி போகுமிடம்  பார்ப்பார் உலக்கை, போகுமிடம் பாரார்சிறிய விடயங்களில் கவனம் செலுத்துதல், பெரிய விடயங்களில் கவனமின்றி இருத்தல்
2ஊத்தைப் போனாலும் ஊழ்வினை போகாது ஊழ்வினை
3ஊரோடு ஒட்டி வாழ்ஒத்துப் போதல்
4ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்பிறர் துன்பத்தில் மகிழ்வடைதல்
5ஊர் ஓட ஓடு ஒத்துப் போதல்
6ஊன் அற்றபோதே உறவு அற்றதுவறுமை
7எங்கே புகை உண்டோ அங்கே நெருப்புண்டுகாரண காரியம் (எந்தவொரு நிகழ்வுக்கும் அல்லது விளைவுக்கும் ஒரு காரணம் இருக்கும்.)
8எச்சில் கையால் காக்கா ஓட்டமாட்டான்கஞ்சத்தனம்
9எட்டி பழுத்ததென்ன ஈயாதார் வாழ்ந்தென்ன?ஈகையின் அவசியம்
10எட்டினால் குடுமியைப் பிடி எட்டாவிட்டால் காலைப் பிடி பாசாங்கு
11எலி அழுதால் பூனை விடுமா?எந்தப் பலனும் இல்லை
12எலியும் பூனையும் போலபகைமை
13எழுதிய எழுத்தை ஈசனாலும் மாற்ற முடியாதுவிதி
14எழுதிய  விதியை யாராலும் மாற்ற முடியாதுஊழ்வினை
15எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி வறுமை
16எனக்கு எதிரி இல்லை நெல்லுக்குப் பதரில்லைதற்புகழ்ச்சி 
17எடுப்பது பிச்சை ஏறுவது பல்லக்கு வீண் பெருமை
18எய்தவன் இருக்க அம்பை நோவானேன்தப்பபிப்ராயம் (தவறான புரிதல்)
19எலி வளையானாலும்  தனி வளை வேண்டும்உடைமை, சொந்தம், உரிமை

Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY