OCTOBER-2020-CURRENT AFFAIRS-PART-9
1. 2000 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப்பெரிய ராட்சத பூனை வரைபடம் பெருவில் உள்ள நாஸ்கா கோடுகள் எனும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 37 மீட்டர் நீளமுள்ள இந்த பூனை வரைபடம் கிமு 500 முதல் கிபி 200 வரையிலான காலத்தைச் சேர்ந்தது.
2. முதலாவது மெய்நிகர் ஜி 20 (G20 (Group of Twenty)) - இளைஞர் 20 உச்சிமாநாடு (Youth 20 (Y20) Summit) 15-17 அக்டோபர் 2020 தினங்களில் சவூதி அரேபியா நாட்டினால் இணைய வழியில் நடைபெற்றது.
3. தேசிய அடையாள தரவுத்தளத்தில் முக சரிபார்ப்பை (Facial verification in National Identification Database) இணைக்கும் முதல் நாடாக சிங்கப்பூர் உருவாகியுள்ளது.
4. நியூசிலாந்தின் பிரதமராக, அந்நாட்டின் தொழிற்கட்சியின் (Labour Party) தலைவர் ஜசிந்தா ஆர்டெர்ன் (Jacinda Ardern) தொடர்ந்து 2 வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
5. கரோனா வைரஸின் முள் போன்ற புரோட்டீன் பகுதியைக் கட்டுப்படுத்தி செயலிழக்க செய்யும் மூலக்கூறு ஒன்றை கண்டுபிடித்து இளம் விஞ்ஞானி போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிகா செப்ராலு வெற்றி பெற்றுள்ளார்.
6. இந்திய வங்கிகள் சங்கத்தின் (Indian Banks’ Association (IBA)) தலைவராக, யூனியன் ஃபாங்க் ஆப் இந்தியாவின் மேலாண் இயக்குநர் ஜி. ராஜ்கிரண் ராய் (G Rajkiran Rai) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
7. 2020-ம் ஆண்டின் அரசியல், பொதுவாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது :
- குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற 82 வயது பெண்மணி பல்கீஸ் தாதி மற்றும்
- மனித உரிமைப் போராளி ஹர்ஷ் மாந்தர் தலைமையில் செயல்படும் காரவானே முஹப்பத் (அன்பிற்கான ஊர்தி) என்ற அமைப்புக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
- இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகள் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மின்சாரம் பெற முடியும்.
Nanticoke sir
ReplyDelete