OCTOBER-2020-CURRENT AFFAIRS-PART-7

 1.”ஆயுஷ்மான் ஷாஹாகார் திட்டம்” (“Ayushman Sahakar” ) : கேரள மாநிலத்திலுள்ள கூட்டுறவு மருத்துவமனைகளை (cooperative hospitals) மாதிரியாகக் கொண்டு, ”ஆயுஷ்மான் ஷாஹாகார் திட்டம்” என்ற பெயரில், இந்தியா முழுவதும் கூட்டுறவு சுகாதார கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான கடனுதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு 18-10-2020 அன்றூ தொடங்கியுள்ளது. 

  • இந்த திட்டமானது தேசிய கூட்டுறவு வளர்ச்சி நிறுவனத்தின் (National Cooperative Development Corporation (NCDC)) மூலம் ரூ.10,000 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ளது.

2.காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு (Kaleshwaram lift irrigation project) தேசிய பசுமை தீர்ப்பாயம் (National Green Tribunal ) சுற்றுசூழல் ஒப்புதலை வழங்கியுள்ளது. 

  • தெலுங்கானா மாநிலத்தில் அமையவுள்ள இந்த திட்டமானது கோதாவரி ஆற்றின் மேல் கட்டப்படவுள்ளது.

3.இந்தியாவின் முதல் கடல் விமான ( seaplane) சேவை குஜராத் மாநிலத்திலுள்ள ஆமதாபாத்தில் 31-10-2020 அன்று தொடங்கப்படவுள்ளது . 

  • இதன் மூலம், ஆமதாபாத் மாவட்டத்திலுள்ள சபர்மதி ஆற்றிலிருந்து நர்மதா மாவட்டத்திலுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை (Statue of Unity) செல்வதற்கான கடல் விமான சேவை வழங்கப்படுகிறது.

4.உலகின் மிகப்பெரிய துத்தநாக உருக்காலை திட்டம் (World biggest Zinc Smelter Project) குஜராத் மாநிலத்தில் அமைக்கப்படவுள்ளது. 

  • இத்திட்டத்தில் இந்துஸ்தான் சிங் லிமிடட் நிறுவனம் (The Hindustan Zinc Limited ) ரூ.10,000 கோடி முதலீடு செய்யவுள்ளது.
5.”CuRED” ( CSIR Ushered Repurposed Drugs ) என்ற பெயரில் அறிவியல் மற்றும் தொழிநுட்ப ஆராய்ச்சி கவுண்சிலின் (CSIR, Council of Scientific and Industrial Research) மூலம் மறுபயன்பாடு செய்யப்படும் மருந்துகளின் விவரங்களை பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்கான இணையதள சேவையை மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் 20-10-2020 அன்று தொடங்கியுள்ளது.

6.இந்தியாவின் மிக நீளமான துரித பேருந்து போக்குவரத்து அமைப்பு (Bus Rapid Transit System (BRTS)) எனும் பெருமையை, 108 கி.மீ. தூரத்துடன் , குஜராத் மாநிலத்தின் சூரத் திலுள்ள துரித பேருந்து போக்குவரத்து அமைப்பு பெற்றுள்ளது.

7. 6-வது இந்தியா -சர்வதேச அறிவியல் திருவிழா 2020 (6th India International Science Festival 2020) 22-25 டிசம்பர் 2020 தினங்களில் இணையவழியில் நடைபெறவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

8.ஆசியாவில் மிக வலிமையான நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்திலுள்ளதாக ’லோவி நிறுவனத்தின் ஆசிய வலிமை குறியீடு 2020’ (’ Lowy Institute Asia Power Index 2020’) ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • முதல் மூன்று இடங்கள்=அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் 
9.பி.உமேஷ் குழு ( P Umesh panel) : இந்தியாவில் இணைய பாதுகாப்பிற்கான காப்பீட்டின் (Cyber Liability Insurance) தேவையைப் பற்றி ஆராய்வதற்காக பி.உமேஷ் தலைமையிலான குழுவை இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI - Insurance Regulatory and Development Authority of India) அமைத்துள்ளது.

10.2019 ஆம் ஆண்டில் நாட்டிலேயே அதிக உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ள மாநிலமாக உத்தரப்பிரதேச மாநிலம்.
  • அடுத்தடுத்த இடஙளை முறையே கேரளா, ராஜஸ்தான் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகியவை பெற்றுள்ளதாகவும் மத்திய சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ள ‘இந்திய சுற்றுலா புள்ளிவிவர அறிக்கையில்’ (Indian Tourist Statistics) தெரிவிக்கப்பட்டுள்ளது.

=======================================================

Comments

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்