Posts

Showing posts from 2020

OCTOBER-2020-CURRENT AFFAIRS-PART-10

  1. ராஜீவ் குமார் குழு : நகர்ப்புற திட்டமிடல் கல்வி முறை யின் சீர்திருத்தங்களை மதிப்பீடு செய்ய நிதி அயோக் (NITI ( National Institution for Transforming India ) Aayog) துணைத் தலைவர் ராஜீவ் குமார் தலைமையில் 14 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவை நிதி ஆயோக் அமைப்பு அமைத்தது. 2. மூட்டு, தசை மற்றும் இணைப்புத் திசு சிகிச்சை மருத்துவ நிபுணா் ஏ.என்.சந்திரசேகரனுக்கு ஆசிய பசிபிக் மூட்டுவாத சிகிச்சை அமைப்பின் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. 3. ‘ கற்போம் எழுதுவோம் இயக்கம் திட்டம்" :  தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் நோக்கில் ‘கற்போம் எழுதுவோம் இயக்கம்’ என்ற திட்டத்தை செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 4. இந்தியாவின் முதல் ‘மணல்மேடு பூங்காக்களை’ ( Sand Dune Park) கோவாவில் அமைப்பதற்காக உலக வங்கி ரூ.3 கோடி நிதியுதவியை வழங்கவுள்ளது.  5. ’முகக்கவசம் இல்லையெனில் சேவை இல்லை’ ( No Mask No Service Policy ) என்ற கொள்கையை  வங்காளதேச அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் படி, முகக்கவசம் அணியாத எந்த நபருக்கும்...

OCTOBER-2020-CURRENT AFFAIRS-PART-9

  1. 2000 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப்பெரிய ராட்சத பூனை வரைபடம் பெருவில் உள்ள நாஸ்கா கோடுகள் எனும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 37 மீட்டர் நீளமுள்ள இந்த பூனை வரைபடம் கிமு 500 முதல் கிபி 200 வரையிலான காலத்தைச் சேர்ந்தது. 2.  முதலாவது மெய்நிகர் ஜி 20 ( G20 (Group of Twenty)) - இளைஞர் 20 உச்சிமாநாடு (Youth 20 (Y20) Summit) 15-17 அக்டோபர் 2020 தினங்களில் சவூதி அரேபியா நாட்டினால் இணைய வழியில் நடைபெற்றது.  3.  தேசிய அடையாள தரவுத்தளத்தில் முக சரிபார்ப்பை ( Facial verification in National Identification Database) இணைக்கும் முதல் நாடாக சிங்கப்பூர் உருவாகியுள்ளது. 4.  நியூசிலாந்தின் பிரதமராக , அந்நாட்டின் தொழிற்கட்சியின் (Labour Party) தலைவர் ஜசிந்தா ஆர்டெர்ன் (Jacinda Ardern) தொடர்ந்து 2 வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். 5. கரோனா வைரஸின் முள் போன்ற புரோட்டீன் பகுதியைக் கட்டுப்படுத்தி செயலிழக்க செய்யும் மூலக்கூறு ஒன்றை கண்டுபிடித்து இளம் விஞ்ஞானி போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிகா செப்ராலு வெற்றி பெற்றுள்ளார். 6. இந்திய வங்கி...

OCTOBER-2020-CURRENT AFFAIRS-PART-8

1. 2022 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை மாறுகொழுப்பு (Trans Fat) பயன்பாடற்ற நாடாக மாற்றுவதற்கு மத்திய சுகாதார அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் 2023 ஆம் ஆண்டிற்குள் மாறுகொழுப்பை (Trans Fat) ஒழிக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2. ”மூபே” (‘MooPay) என்ற பெயரில் கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கான முதலாவது தானியங்கி மின்னணு பணப்பரிமாற்ற செயலியை ’ஸ்டெல்லாப்ஸ்’ (Stellapps) எனப்படும் ஐ.ஐ.டி. மெட்ராஸ் உதவியுடனான தொழில் முனைவு நிறுவனம் ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. 3. ”சாண்ட் ஏவுகணை” ( ”SANT Missile -Standoff Anti-Tank Guided Missile” ) எனப்படும் வானிலிருந்து 15கி.மீ. முதல் 20 கி.மீ. வரையிலான நிலத்திலுள்ள எதிரிகளின் இலக்கினைத் தாக்க வல்ல ஏவுகணையினை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organisation (DRDO)) 19-10-2020 அன்று ஒடிஷாவின் சந்திப்பூர் சோதனை தளத்தில் வெற்றிகரமாக சோதித்துள்ளது. 4.இந்தியாவின் முதல் “பல்நோக்கு நவீன தளவாடங்கள் பூங்காவை” ( Multi-modal Logistic Park ) அஸ்ஸாம் மாநிலத்தின் ...

OCTOBER-2020-CURRENT AFFAIRS-PART-7

  1. ”ஆயுஷ்மான் ஷாஹாகார் திட்டம்” (“ Ayushman Sahakar ” ) : கேரள மாநிலத்திலுள்ள கூட்டுறவு மருத்துவமனைகளை ( cooperative hospitals) மாதிரியாகக் கொண்டு, ”ஆயுஷ்மான் ஷாஹாகார் திட்டம்” என்ற பெயரில், இந்தியா முழுவதும் கூட்டுறவு சுகாதார கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான கடனுதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு 18-10-2020 அன்றூ தொடங்கியுள்ளது.  இந்த திட்டமானது தேசிய கூட்டுறவு வளர்ச்சி நிறுவனத்தின் ( National Cooperative Development Corporation (NCDC) ) மூலம் ரூ.10,000 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ளது. 2. காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு ( Kaleshwaram lift irrigation project) தேசிய பசுமை தீர்ப்பாயம் ( National Green Tribunal ) சுற்றுசூழல் ஒப்புதலை வழங்கியுள்ளது.  தெலுங்கானா மாநிலத்தில் அமையவுள்ள இந்த திட்டமானது கோதாவரி ஆற்றின் மேல் கட்டப்படவுள்ளது. 3.இந்தியாவின் முதல் கடல் விமான ( seaplane) சேவை குஜராத் மாநிலத்திலுள்ள ஆமதாபாத்தில் 31-10-2020 அன்று தொடங்கப்படவுள்ளது .  இதன் மூலம், ஆமதாபாத் மாவட்டத்திலுள்ள சபர்மதி ஆற்றிலிருந்து நர்மதா மாவட்டத்திலுள்ள சர்தார் வல்லபாய் பட்...

OCTOBER-2020-CURRENT AFFAIRS-PART-6

 1. “ஸ்வாமித்வா” (SVAMITVA -Survey of Villages and Mapping with Improvised Technology in Village Areas) திட்டத்தின் கீழ் , சொத்து விவர அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி புது தில்லியில் இருந்து காணொலி வழியாக 11-10-2020 அன்று தொடக்கி வைத்தாா்.  கிராமப்புறங்களில் வசிக்கும் லட்சக்கணக்கானோா் தங்கள் சொத்துகளைக் காண்பித்து கடனுதவி, நிதிச் சலுகை ஆகியவை பெறுவற்கு இந்த திட்டம் உதவிகரமாக இருக்கும். 2. ”இந்தியா சாட்” (India Sat) என்ற பெயரில் கருர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள்  உருவாக்கிய சோதனை செயற்கைக்கோள், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஷாவின் மூலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இந்த செயற்கைக் கோளை ,கரூர் மாவட்டம் தான்தோன்றிமலையைச் சேர்ந்த அத்னான் , நாகம்பள்ளியைச் சேர்ந்த கேசவன் மற்றும் தென்னிலையைச் சேர்ந்த அருண் ஆகிய மூன்று மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.   முன்னதாக, 2017-ம் ஆண்டில் ஷாரூக்கின் குழு இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவாக ‘கலாம்சாட் (Kalamsaat)’ எனும் செயற்கைக்கோளை நாசா வெளியிட்டது என்பது குறிப்பிடத்த...

OCTOBER-2020-CURRENT AFFAIRS-PART-5

1.மருத்துவத்துக்கான நோபல் பரிசு 2020 (Nobel Prize in Physiology or Medicine)      கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் ஹெபடைடிஸ் சி வைரஸ் பரவல் மூலத்தைக் (Hepatitis C virus) கண்டறிந்ததற்காக , ஹார்வே ஜே. ஆல்டர் ( Harvey J. Alter) -அமெரிக்கா,  மைக்கேல் ஹாஃப்டன் ( Michael Houghton) -இங்கிலாந்து   சார்லஸ் எம். ரைஸ் ( Charles M. Rice ), அமெரிக்கா  2 . பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2020            ஏல முறைகள் குறித்த ஆராய்ச்சிக்காக ,    பால் ஆர்.மில்க்ரோம் (Paul R Milgrom)  ராபர்ட் பி.வில்சன் (Robert B Wilson)  3.இயற்பியலுக்கான நோபல் பரிசு 2020        கருந்துகளை உருவாக்கம், நட்சத்திர மண்டலத்தின் காணப்படும் அதிசய பொருள் கண்டுபிடிப்பு ஆகியவற்றுக்காக  ரோஜர் பென்ரோஸ் ( Roger Penrose) ரெயின்ஹார்டு ஜென்சல் ( Reinhard Genzel) ஆண்ட்ரியா கெஸ் ( Andrea Ghez) 4.அமைதிக்கான நோபல் பரிசு 2020  உலக உணவு திட்ட அமைப்பு  (World Food Programme (WFP)  5.இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2020...

OCTOBER-2020-CURRENT AFFAIRS-PART-4

  1.இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) புதிய மற்றும் 4 - வது  துணை ஆளுநராக   எம்.ராஜேஸ்வர்ரா  (M Rajeshwar Rao) நியமிக்கப்பட்டுள்ளார். 2.  இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி யின் மேலாண்மை இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக  ஜெ.வெங்கட்ராமு  நியமிக்கப்பட்டுள்ளாா். 3.  பொதுக் கல்வித் துறையை  (public education sector) முழுவதுமாக டிஜிட்டல் மயமாக்கியுள்ள (completely digital) இந்தியாவின் முதல் மாநிலமாக  கேரள மாநிலம்  மாறியுள்ளது. 4. 100% வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான மத்திய அரசின்  ‘ஜல் ஜீவன் திட்டத்தின்’ (Jal Jeevan Mission (JJM))  கீழ், கிராமப்புறங்களிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் பயன்பாட்டிலுள்ள வீட்டு குடிநீர் இணைப்பு (Functional Household Tap Connections) வழங்கியுள்ள இந்தியாவின் முதல் மாநிலம் (Har Ghar Jal) எனும் பெருமையை 9-10-2020 அன்று  கோவா மாநிலம்  பெற்றுள்ளது. 5. உலகின் இரண்டாவது  புகை கோபுரம் (Smog Tower)  புது தில்லியின்  கோனாட் பிளேஸ்  (Connaught Place) எனுமிடத்தில் அமைப்பதற...

TNPSC GROUP-4 FREE TEST BATCH-TELEGRAM GROUP LINK

Image
  Telegram Group Link-GROUP-4-Batch ============================== https://t.me/krishoba_group4_batch

OCTOBER-2020-CURRENT AFFAIRS-PART-3

1.இந்தியாவின் முதல் இயற்கை நறுமணப்பொருள் விதை பூங்காக்கள் (Organic Spices Seed Parks) குஜராத் மாநிலத்தின் பாதான் (Patan) மற்றும் பனஸ்கந்தா (Banaskantha) ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ளன. 2. டிஜிட்டல் சேவா சேது திட்டம்’ ( Digital Seva Setu Programme) என்ற பெயரில் கிராம பஞ்சாயத்துக்களை கம்பிவட இணையம்(fibre network) மூலமாக இணைப்பதற்கான திட்டத்தை குஜராத் மாநில அரசு தொடங்கியுள்ளது. 3. ரவி சோப்ரா குழு (Ravi Chopra Committee) : இந்து புனித தலங்களான கேத்ரிநாத்(Kedarnath), பத்ரிநாத்(Badrinath), கங்கோத்ரி(Gangotri) மற்றும் யமுனோத்திரி (Yamunotri) ஆகியவற்றை சாலை வழியாக இணைப்பதற்கான சார்தாம் பரியோஜனா (Chardham Pariyojana) திட்டத்தில் நடைபெற்றுள்ள விதிமுறை மீறுதல்களைப் பற்றி ஆராய ரவி சோப்ரா தலைமையிலான குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. 4. பாரத ஸ்டேட் வங்கியின் (State Bank of India (SBI)) தலைவராக தினேஷ் குமார் காராவை (Dinesh Kumar Khara) மத்திய அரசு 6-10-2020 அன்று நியமித்துள்ளது. 5.உள்நாட்டு விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பின் (Bureau of Civil Aviation Security (BCAS)) இயக்குநர் ...

OCTOBER-2020-CURRENT AFFAIRS-PART-2

1. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO)  தனது  வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்கான “சுக்ரயான் -1” (“Shukrayaan-1”) திட்டத்தை பிரான்ஸ் நாட்டின் விண்வெளி ஆய்வுகளுக்கான தேசிய மையத்துடன் (CNES- National Centre for Space Studies; French) இணைந்து  2025 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தவுள்ளது. VIRAL (Venus Infrared Atmospheric Gases Linker / வெள்ளி அகச்சிவப்பு வளிமண்டல வாயு இணைப்பான் ) எனும் கருவியை இந்திய விண்வெளி ஆய்வு மையம் தேர்வு செய்துள்ளது 2.சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு பொருள்களை ஏற்றிக் கொண்டு ‘கல்பனா சாவ்லா’ விண்கலத்தை விண்ணில் செலுத்தும் திட்டத்தை அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. 3.மகாத்மா காந்தி தேசிய அறக்கட்டளையின் (Mahatma Gandhi National Foundation(MGNF) )  ”காந்தி விருது 2020” (Gandhi Award 2020) , ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர்  சஞ்சய் சிங்கிற்கு (Sanjay Singh) அறிவிக்கப்பட்டுள்ளது. 4.மாமல்லபுரத்தில் ”சுவாதேஷ் தா்ஷன் திட்டத்தின்” கீழ் சுற்றுலா தகவல் கருத்தியல் மையம்"  அமைக்கப்பட்டுள்ளது. 5.நீா்மூழ்கிக் கப்பலைத்...

OCTOBER-2020-CURRENT AFFAIRS-PART-1

 1.தமிழகத்தில் ‘ ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 1-10-2020 அன்று தொடங்கி வைத்தார். 2. அதிவிரைவு ரோந்து கப்பலான ‘ கனகலதா பருவா ’ கடலோர காவல் படையில் 30-9-2020 அன்று  சோ்க்கப்பட்டது. 3. ஒலியை விட பல மடங்கு வேகத்தில் செல்லும் அதிநவீன பிரமோஸ் ஏவுகணையை இந்தியா 30-9-2020 அன்று ஒடிஸாவின் பாலாசூா் கடற்கரையில் உள்ள ஒங்கிணைந்த ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக சோதித்தது. 400 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது  பிரமோஸ் ஏரோஸ்பேஸ்கூட்டுநிறுவனம் -  இந்தியா + ரஷியா 4. அம்பேத்கர் சமூக கண்டுபிடிப்பு மற்றும் அடைவுக்கால திட்டத்தை (Ambedkar Social Innovation and Incubation Mission) மத்திய சமூக நீதி அமைச்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.  உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் எஸ்.சி. மாணவர்களிடையே கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவை ஊக்குவிக்கும்  திட்ட ம் 5. அஜய் குமார் பல்லா குழு (Ajay Kumar Bhalla Committee) : அனைத்து சீன அந்நிய முதலீட்டு திட்டங்களையும் ஆராய இந்தி...

TNPSC GROUP-4-FREE TEST BATCH-SCHEDULE-1-FULL DETAILS

Image
 

💥நாளை முதல் புதிய உத்வேகத்துடன்😎🐎

 👍Hi Friends.. Krishoba Academy-இல் இருந்து உங்கள் கிருஷ்ணன்.. இந்த இணையதளம் தற்போது TNPSC படிக்கும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.. இந்த இணையதளம் மூலம் உங்களுக்கு பயனுள்ள வகையில் மிக எளிதான முறையில் நிறைய Content கொடுக்க உள்ளோம்.. எதிர்வரும் குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுக்கு மாணவர்களை சிறந்த முறையில் தயார்படுத்தி அனுப்புவதே எங்களுடைய முதல் நோக்கம்.. உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி.. எங்களுடைய முழு உழைப்பையும் வருகிற நாட்களில் உங்களுக்காக கொடுக்க உள்ளோம்.. மாணவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளவும்.. நன்றி By KRISHOBA ACADEMY - KRISHNAN AND SHOBA

INTRODUCTION

Image