Posts

Showing posts from December, 2020

OCTOBER-2020-CURRENT AFFAIRS-PART-10

  1. ராஜீவ் குமார் குழு : நகர்ப்புற திட்டமிடல் கல்வி முறை யின் சீர்திருத்தங்களை மதிப்பீடு செய்ய நிதி அயோக் (NITI ( National Institution for Transforming India ) Aayog) துணைத் தலைவர் ராஜீவ் குமார் தலைமையில் 14 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவை நிதி ஆயோக் அமைப்பு அமைத்தது. 2. மூட்டு, தசை மற்றும் இணைப்புத் திசு சிகிச்சை மருத்துவ நிபுணா் ஏ.என்.சந்திரசேகரனுக்கு ஆசிய பசிபிக் மூட்டுவாத சிகிச்சை அமைப்பின் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. 3. ‘ கற்போம் எழுதுவோம் இயக்கம் திட்டம்" :  தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் நோக்கில் ‘கற்போம் எழுதுவோம் இயக்கம்’ என்ற திட்டத்தை செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 4. இந்தியாவின் முதல் ‘மணல்மேடு பூங்காக்களை’ ( Sand Dune Park) கோவாவில் அமைப்பதற்காக உலக வங்கி ரூ.3 கோடி நிதியுதவியை வழங்கவுள்ளது.  5. ’முகக்கவசம் இல்லையெனில் சேவை இல்லை’ ( No Mask No Service Policy ) என்ற கொள்கையை  வங்காளதேச அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் படி, முகக்கவசம் அணியாத எந்த நபருக்கும்...

OCTOBER-2020-CURRENT AFFAIRS-PART-9

  1. 2000 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப்பெரிய ராட்சத பூனை வரைபடம் பெருவில் உள்ள நாஸ்கா கோடுகள் எனும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 37 மீட்டர் நீளமுள்ள இந்த பூனை வரைபடம் கிமு 500 முதல் கிபி 200 வரையிலான காலத்தைச் சேர்ந்தது. 2.  முதலாவது மெய்நிகர் ஜி 20 ( G20 (Group of Twenty)) - இளைஞர் 20 உச்சிமாநாடு (Youth 20 (Y20) Summit) 15-17 அக்டோபர் 2020 தினங்களில் சவூதி அரேபியா நாட்டினால் இணைய வழியில் நடைபெற்றது.  3.  தேசிய அடையாள தரவுத்தளத்தில் முக சரிபார்ப்பை ( Facial verification in National Identification Database) இணைக்கும் முதல் நாடாக சிங்கப்பூர் உருவாகியுள்ளது. 4.  நியூசிலாந்தின் பிரதமராக , அந்நாட்டின் தொழிற்கட்சியின் (Labour Party) தலைவர் ஜசிந்தா ஆர்டெர்ன் (Jacinda Ardern) தொடர்ந்து 2 வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். 5. கரோனா வைரஸின் முள் போன்ற புரோட்டீன் பகுதியைக் கட்டுப்படுத்தி செயலிழக்க செய்யும் மூலக்கூறு ஒன்றை கண்டுபிடித்து இளம் விஞ்ஞானி போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிகா செப்ராலு வெற்றி பெற்றுள்ளார். 6. இந்திய வங்கி...

OCTOBER-2020-CURRENT AFFAIRS-PART-8

1. 2022 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை மாறுகொழுப்பு (Trans Fat) பயன்பாடற்ற நாடாக மாற்றுவதற்கு மத்திய சுகாதார அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் 2023 ஆம் ஆண்டிற்குள் மாறுகொழுப்பை (Trans Fat) ஒழிக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2. ”மூபே” (‘MooPay) என்ற பெயரில் கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கான முதலாவது தானியங்கி மின்னணு பணப்பரிமாற்ற செயலியை ’ஸ்டெல்லாப்ஸ்’ (Stellapps) எனப்படும் ஐ.ஐ.டி. மெட்ராஸ் உதவியுடனான தொழில் முனைவு நிறுவனம் ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. 3. ”சாண்ட் ஏவுகணை” ( ”SANT Missile -Standoff Anti-Tank Guided Missile” ) எனப்படும் வானிலிருந்து 15கி.மீ. முதல் 20 கி.மீ. வரையிலான நிலத்திலுள்ள எதிரிகளின் இலக்கினைத் தாக்க வல்ல ஏவுகணையினை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organisation (DRDO)) 19-10-2020 அன்று ஒடிஷாவின் சந்திப்பூர் சோதனை தளத்தில் வெற்றிகரமாக சோதித்துள்ளது. 4.இந்தியாவின் முதல் “பல்நோக்கு நவீன தளவாடங்கள் பூங்காவை” ( Multi-modal Logistic Park ) அஸ்ஸாம் மாநிலத்தின் ...

OCTOBER-2020-CURRENT AFFAIRS-PART-7

  1. ”ஆயுஷ்மான் ஷாஹாகார் திட்டம்” (“ Ayushman Sahakar ” ) : கேரள மாநிலத்திலுள்ள கூட்டுறவு மருத்துவமனைகளை ( cooperative hospitals) மாதிரியாகக் கொண்டு, ”ஆயுஷ்மான் ஷாஹாகார் திட்டம்” என்ற பெயரில், இந்தியா முழுவதும் கூட்டுறவு சுகாதார கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான கடனுதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு 18-10-2020 அன்றூ தொடங்கியுள்ளது.  இந்த திட்டமானது தேசிய கூட்டுறவு வளர்ச்சி நிறுவனத்தின் ( National Cooperative Development Corporation (NCDC) ) மூலம் ரூ.10,000 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ளது. 2. காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு ( Kaleshwaram lift irrigation project) தேசிய பசுமை தீர்ப்பாயம் ( National Green Tribunal ) சுற்றுசூழல் ஒப்புதலை வழங்கியுள்ளது.  தெலுங்கானா மாநிலத்தில் அமையவுள்ள இந்த திட்டமானது கோதாவரி ஆற்றின் மேல் கட்டப்படவுள்ளது. 3.இந்தியாவின் முதல் கடல் விமான ( seaplane) சேவை குஜராத் மாநிலத்திலுள்ள ஆமதாபாத்தில் 31-10-2020 அன்று தொடங்கப்படவுள்ளது .  இதன் மூலம், ஆமதாபாத் மாவட்டத்திலுள்ள சபர்மதி ஆற்றிலிருந்து நர்மதா மாவட்டத்திலுள்ள சர்தார் வல்லபாய் பட்...

OCTOBER-2020-CURRENT AFFAIRS-PART-6

 1. “ஸ்வாமித்வா” (SVAMITVA -Survey of Villages and Mapping with Improvised Technology in Village Areas) திட்டத்தின் கீழ் , சொத்து விவர அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி புது தில்லியில் இருந்து காணொலி வழியாக 11-10-2020 அன்று தொடக்கி வைத்தாா்.  கிராமப்புறங்களில் வசிக்கும் லட்சக்கணக்கானோா் தங்கள் சொத்துகளைக் காண்பித்து கடனுதவி, நிதிச் சலுகை ஆகியவை பெறுவற்கு இந்த திட்டம் உதவிகரமாக இருக்கும். 2. ”இந்தியா சாட்” (India Sat) என்ற பெயரில் கருர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள்  உருவாக்கிய சோதனை செயற்கைக்கோள், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஷாவின் மூலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இந்த செயற்கைக் கோளை ,கரூர் மாவட்டம் தான்தோன்றிமலையைச் சேர்ந்த அத்னான் , நாகம்பள்ளியைச் சேர்ந்த கேசவன் மற்றும் தென்னிலையைச் சேர்ந்த அருண் ஆகிய மூன்று மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.   முன்னதாக, 2017-ம் ஆண்டில் ஷாரூக்கின் குழு இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவாக ‘கலாம்சாட் (Kalamsaat)’ எனும் செயற்கைக்கோளை நாசா வெளியிட்டது என்பது குறிப்பிடத்த...