OCTOBER-2020-CURRENT AFFAIRS-PART-10
1. ராஜீவ் குமார் குழு : நகர்ப்புற திட்டமிடல் கல்வி முறை யின் சீர்திருத்தங்களை மதிப்பீடு செய்ய நிதி அயோக் (NITI ( National Institution for Transforming India ) Aayog) துணைத் தலைவர் ராஜீவ் குமார் தலைமையில் 14 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவை நிதி ஆயோக் அமைப்பு அமைத்தது. 2. மூட்டு, தசை மற்றும் இணைப்புத் திசு சிகிச்சை மருத்துவ நிபுணா் ஏ.என்.சந்திரசேகரனுக்கு ஆசிய பசிபிக் மூட்டுவாத சிகிச்சை அமைப்பின் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. 3. ‘ கற்போம் எழுதுவோம் இயக்கம் திட்டம்" : தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் நோக்கில் ‘கற்போம் எழுதுவோம் இயக்கம்’ என்ற திட்டத்தை செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 4. இந்தியாவின் முதல் ‘மணல்மேடு பூங்காக்களை’ ( Sand Dune Park) கோவாவில் அமைப்பதற்காக உலக வங்கி ரூ.3 கோடி நிதியுதவியை வழங்கவுள்ளது. 5. ’முகக்கவசம் இல்லையெனில் சேவை இல்லை’ ( No Mask No Service Policy ) என்ற கொள்கையை வங்காளதேச அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் படி, முகக்கவசம் அணியாத எந்த நபருக்கும்...