OCTOBER-2020-CURRENT AFFAIRS-PART-4

 1.இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) புதிய மற்றும் 4-வது துணை ஆளுநராக எம்.ராஜேஸ்வர்ரா (M Rajeshwar Rao) நியமிக்கப்பட்டுள்ளார்.

2. இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் மேலாண்மை இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக ஜெ.வெங்கட்ராமு நியமிக்கப்பட்டுள்ளாா்.

3. பொதுக் கல்வித் துறையை (public education sector) முழுவதுமாக டிஜிட்டல் மயமாக்கியுள்ள (completely digital) இந்தியாவின் முதல் மாநிலமாக கேரள மாநிலம் மாறியுள்ளது.

4. 100% வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான மத்திய அரசின் ‘ஜல் ஜீவன் திட்டத்தின்’ (Jal Jeevan Mission (JJM)) கீழ், கிராமப்புறங்களிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் பயன்பாட்டிலுள்ள வீட்டு குடிநீர் இணைப்பு (Functional Household Tap Connections) வழங்கியுள்ள இந்தியாவின் முதல் மாநிலம் (Har Ghar Jal) எனும் பெருமையை 9-10-2020 அன்று கோவா மாநிலம் பெற்றுள்ளது.

5. உலகின் இரண்டாவது புகை கோபுரம் (Smog Tower) புது தில்லியின் கோனாட் பிளேஸ் (Connaught Place) எனுமிடத்தில் அமைப்பதற்கு தில்லி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

  • உலகின் முதலாவது புகை கோபுரம் சீனாவில் உள்ளது.
6. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, முதல் கதிர்வீச்சுக்கெதிரான ஏவுகணையான ( Anti-Radiation Missile) ‘ருத்ரம்-1’ (RUDRAM 1) ஏவுகணை சுகோய்-30 போர் விமானத்திலிருந்து (Sukhoi-30 Fighter Aircraft) மூலம் 9-10-2020 அன்று ஒடிசாவின் பாலாசோரில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

7.”சுரக்‌ஷா கவச்” (Suraksha Kavach) என்ற பெயரில் தீவிரவாதத் தாக்குதலுகெதிரான கூட்டு ஒத்திகை இந்திய இராணுவம் மற்றும் மகாராஷ்டிர மாநில காவல்துறை இடையே பூனேவில் 9-10-2020 அன்று நடைபெற்றது.

8. ராஜீவ் காபா  குழு (Rajiv Gauba Committee): தகவல் தொடர்பு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை பகிர்மானத்திற்கான (Telecom Spectrum Allocation) வழிமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்காக மத்திய கேபினட் செயலர் ராஜீவ் காபா தலைமையிலான குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. 

9.எம்.எஸ்.ஆனந்த் குழு (M.S. Ananth Committee) : தொழில்முறை பொறியாளர்கள் மசோதாவை (Professional Engineers Bill) தயாரிப்பதற்காக, சென்னை ஐ.ஐ.டியின் முன்னாள் இயக்குநர் எம்.எஸ்.ஆனந்த் தலைமையிலான குழுவை அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி குழு (All India Council for Technical Education (AICTE)) அமைத்துள்ளது. 

10.ஐ.என்.எஸ்.சிந்துவீர்” (“INS Sindhuvir”) என்ற பெயரிலான நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா, மியான்மர் நாட்டிற்கு வழங்கவுள்ளது. ’சாகர்’ (SAGAR - Security and Growth for All in the Region)திட்டத்தின் கீழ் இந்த நீர்மூழ்கிக்கப்பல் வழங்கப்படவுள்ளது.

===================================================

Comments

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்